விவசாய பண்ணையை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்!

Loading

கீழ்மாம்பட்டு ஊராட்சியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயி பண்ணையை பார்வையிட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு ஊராட்சியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் வேளாண் கல்லூரியின் RAWE (Rural Agricultural Work Experience) திட்ட மாணவர்கள் வெற்றிகரமாக மிளகு சாகுபடி செய்து வரும் திருமலை, விவசாயப் பண்ணையை பார்வையிட்டனர்.

இந்த பயணத்தின் போது மாணவர்கள் மிளகு சாகுபடியில் பயன்படுத்தப்படும் முறைகள், பராமரிப்பு நுட்பங்கள் மற்றும் சந்தை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொண்டனர். குறிப்பாக, இங்கு பெரிதளவில் பயிரிடப்படும் முக்கிய மிளகு வகையான ‘கரிமுண்டா’ குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.

திருமலை அய்யாவின் அனுபவங்கள் நம்மை மிகவும் ஊக்கமளிக்கின்றன. அவரிடமிருந்து பல நுணுக்கங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

0Shares