கல்லூரி கனவு உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பங்கேற்பு!

Loading

மாணவ, மாணவிகளுக்கான “கல்லூரி கனவு” உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை (ம) தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான “கல்லூரி கனவு” உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், உதவி இயக்குநர் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலூர்) திருமதி காயத்ரி, உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

0Shares