காயல்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய மறுப்பு அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையால் பரபரப்பு.
காயல்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய மறுப்பு அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையால் பரபரப்பு.
தூத்துக்குடி. மார்ச் 6
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில்
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அரசு ஜி.ஓ. பிறப்பிக்காத நிலையில் நகராட்சி நிர்வாகத்தின்
சுற்றறிக்கையின் அடிப்படையில் திடீரென நகராட்சி ஆணையாளரின் உத்தரவின் படி,
நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மனை இடங்களுக்கு VLT காலிமனை வரி நகராட்சி
அலுவலகத்தில் கட்டி அதற்கான ரசீது பெற்று வந்தால் தான் பத்திரம் பதிவு செய்யப்படும் என
பத்திரப்பதிவு அதிகாரிகள் பொதுமக்களிடம் வாய்மொழியாக கூறியதை தொடர்ந்து கடந்த ஒரு
வார காலமாக பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது. இதனை
பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் பதிவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எங்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என
கூறிஉள்ளனர். இதனைத் தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர்
ஹென்றியின் ஆலோசனைப்படி காயல்பட்டினம் கிளை செயலாளர் அபுபக்கர் சித்திக்
தலைமையில் ஆயுட்கால உறுப்பினர்கள் மாஷாஅல்லாதாவூத், லேன்ட் மார்க் மொய்தீன்
அப்துல் காதர். எஸ்.எ.கே.மஹ்மூத் சுல்தான். மற்றும் பத்திரபதிவு சிவா. சுதாகர் உள்பட பலர்
காயல்பட்டினம் பதிவு அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதில் நூற்றுக்கும்
மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டார்.
இதனால் கடந்த ஒரு வாரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆவண பதிவுகள். இந்த
போராட்டத்தால் காலி மனை இடத்துக்கான வரி ரசீது இல்லாமல் மீண்டும் பதிவுகள்
தொடர்ந்து நடைபெற்றது.