திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து பேட்டியளித்தார்,
கோவை முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது என அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து பேட்டியளித்தார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் இன்று பந்தயசாலை பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் ஜெயராமன், சூலூர் கந்தசாமி, அம்மன் அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராகவும், இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் திமுக மீது கோபமாக உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பற்ற சூழல் முன்னாள் முதல்வருக்கு ஏற்படும் அளவிற்கு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது என சாடினார். கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை திமுக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கூறினார். பொய் வழக்கு போடாதே, பழி வாங்காதே என கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.