மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கம்..
கந்தர்வக்கோட்டையில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கம்..மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம் ,பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல்,பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி வினா போட்டி, வானவில் மன்றம் ஆகியவற்றிற்கான போட்டிகளை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் வட்டார வள மையம் கந்தர்வகோட்டை யில் நடைப்பெற்றது . இப்போட்டிக்கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியினை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், வெள்ளாள விடுதி அரசுஉயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மு.முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். நடுவர்களாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மணிகண்டன் , காளியம்மாள், புவனேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். இப்போட்டியில் அன்றாட வாழ்வில் அறிவியல் என்ற தலைப்பில் காற்றழுத்தம் வெப்பம் ஒளி வேதியல் ஆகிய தலைப்புகளில் மாணவ மாணவிகள் அறிவியல் சோதனைகளான அமில,கார சோதனைகள், வெப்பத்தினால் நீர்மட்டம் உயர்தல், வெப்ப சலனம்,. பஞ்ச காவியம், காற்று குளிர்பான், சுழலும் நீர் மூழ்கி, அசைந்தாடும் மெழுகுவர்த்தி, காற்றழுத்த முட்டை, ஏர்கூலர் ,இயற்கை நிறம் காட்டி உள்ளிட்ட அறிவியல் சோதனைகள் மாணவர்கள் செய்து காண்பித்தார்கள். மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான வானவில் போட்டியில் பங்கேற்பார்கள். மாணவர்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து,பாரதிதாசன்,இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், பழனிச்சாமி,ஆகியோர் கலந்து கொண்டன