மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் (08.03.2023) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்வச் பாரத் மிஷன் (SWACHH BHARAT MISSION) 2.0 திட்டத்தில் சமூகக்கழிப்பறை/பொதுக்கழிப்பறையில் கியூ.ஆர்.கோடு (Q.R.CODE) பயன்படுத்தி உபயோகிக்கும் முறையினை 2022ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான விருதினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அவர்களுக்கு வழங்கினார். உடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அவர்கள், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பி.பொன்னையா அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.