சாரதா தேவி மெட்ரிக்குலேஷான் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை மாவட்ட வூசு அசோசியேஷானில் சாதனை புரிந்த மாணவ,மாணவிகளுக்கு சென்னை மாவட்ட வூசு தலைவர் பி.ஒ.புல்கானி தலைமையில் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள சாரதா தேவி மெட்ரிக்குலேஷான் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.பாராட்டுவிழாவில் எஸ்.சரண்யா மற்றும் எஸ்.சுவாதி இருவரும் என்.ஐ.எஸ் படித்து முடித்துள்ளதற்கும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வூசு போட்டியில் கலந்துகொண்ட வி. தருண்ராஜ் இரண்டு தங்கப்பதக்கமும் ஏ.எஸ்.சரத் வெண்கல பதக்கமும் வென்றதற்காக இவர்களை சென்னை மாவட்ட வூசு கௌரவ தலைவர்கள் சுரேஷ்குமார் மற்றும் மனேகர பூபதி சென்னை மாவட்ட வூசு தலைவர் பி.ஒ.புல்கானி சென்னை மாவட்ட வூசு செயலாளர் பி.விசாகபதி,சென்னை மாவட்ட வூசு தொழில்நுட்ப இயக்குனர் பி.தண்டபாணி,சென்னை மாவட்ட வூசு துணை தலைவர் திரு ஆர்.ஆலய குமார்,சென்னை மாவட்ட வூசு பொருளாளர் ஜெயச்சந்திரன்,புதுகை வரலாறு சென்னை பதிப்பின் தலைமை ஆசிரியர் காதர்,நேத்தாஜி சமூக சேவை இயக்கத்தின் தலைவர் டாக்டர் சரத் ராஜ் மற்றும் செயலாளர் எஸ்.வன்னியராஜன்,சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் சரவணன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முருகன்,கோடீஸ்வரன்,குங்ஃபூ மாஸ்டர் தினகரன்,மணிமாறன்,மணிகண்டன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.