மலேசியாவில் தவித்த வந்த தமிழ் பெண்ணை தனது சொந்த செலவில் மீட்பு:

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சார்ந்த சிவகாமி என்ற பெண் ,
கடந்த 5 மாதங்களுக்கு முன்னாள் வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசிய சென்றுள்ளார், பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம்  மீட்க உதவுமாறு 19.12.2022 அன்று வெளியான செய்தியின் அடிப்படையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது பெருமுயற்சியால் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு அந்த பெண் மீட்கப்பட்டார், தனது சொந்த செலவில் சிவகாமி 13.02.2023 அன்று விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் அவர்களை 14.02.2023 இன்று நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *