பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை

Loading

சென்னை, அக்- 26

தமிழ்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை

, கோயம்புத்துார் மாவட்டம், கோட்டை மேட்டில் பிரசித்தில  பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த சனிக்கிழமையன்று  பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்  இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும்  இதற்கு காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்ற கூறப்பட்டாலும் காருக்குள் இருந்தவர்  காவல்துறையின் கண்காணிப்பில் இருந்ததாகவும்  பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன,

வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும் சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும் கோலிகுண்டுகளும்  சிதறிக்கிடந்ததாகவும் மேற்படி விபத்தில்  உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத்துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும்  இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய துகள்கள் மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன,

காவல்துறை தலைமை இயக்குனரே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது,  என்பது தெளிவாகிறது,மேலும் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு  இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை, சட்டம் ஒழுங்கை சீரழித்து கொண்டிருக்கிற திமுக அரசுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,  தீவிரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும்  அழிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டு காவல்துறைக்கு உள்ளது,

முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்னையில்  உடனடியாக தனிக்கவனம் செலுத்தி தமிழ்நாட்டை தமிழ்நாட்டு மக்களை வன்முறையாளர்களிடமிருந்தும்  தீவிரவாதிகளிடமிருந்தும் பயங்கர வாதிகளிடமிருந்து காப்பாறற  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

0Shares

Leave a Reply