ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பிரசவ வலி அழகிய ஆண்குழந்தை பிறந்தது
சென்னை, அகர்- 26
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது, ரயில்வே பிளாட்பாரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது
தீபாவளி பண்டிகையன்று பகல் 12 மணிக்கு மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வெஸ்ட் கோல்டு எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்துார் ஸ்டேஷனில் சாந்தினி என்ற இளம் பெண் பயணம் செய்துகொண்டிருந்தார், நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது, உடனடியாக அரக்கோணம் பிளாட்பாரத்தில் உள்ள பயணியர் அறையில் தங்க வைக்கப்பட்டு ரயில்வே தலைமை காவலர் பரமேஸ்வரி அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்து தந்தார், சாந்தினிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது, பின்னர் தாயும் சேயும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர், தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர், பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்த தலைமை காவலர் பரமேஸ்வரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்,