பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியனுக்கு வாக்களிப்பீர் பஞ்சாப் மாநில விவசாய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜிந்தர் சிங் பேச்சு.

Loading

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் அவர்களுக்கு பஞ்சாப் மாநில விவசாய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ் சுந்தர் சிங் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அவர் பேசும்போது மோடி அரசு விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிக்கு அடகு வைத்து வருகிறார் விவசாயிகள் பயிர் செய்யும் தானியங்களை விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் இருந்ததை அதனை மாற்றி விவசாயிகள் விளையும் பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடமானம் வைத்து வருகிறார் இது போன்ற செயல்களை வேலன் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 100 நாட்களுக்கு மேலாக டெல்லி தலைநகரில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அவற்றையெல்லாம் கவலைப்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை தாரைவார்க்கும் எண்ணத்திலேயே இருந்து வரும் மோடி அவர்களை இந்திய நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும் அதற்கு தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மெய்யநாதன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் அவருடன் வேட்பாளர் மெய்யநாதன் அறந்தாங்கி சேர்மன் சண்முகநாதன் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *