தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அதிமுக வடகரை பேரூர் கழகச் செயலாளர் A.அலியார் வழங்கி துவக்கி வைத்தார்.

Loading

தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 2500 ரூபாயும் முழுக்கரும்பு , அரிசி, சர்க்கரை, முந்திரிபருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதன்படி தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அதிமுக வடகரை பேரூர் கழகச் செயலாளர் A.அலியார் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகரத்துணைச் செயலாளர் சுரேஷ், 7 வது வார்டு செயலாளர் ஜெ.ஜெ.நகர் இசக்கி முருகையா, சௌதி அரேபியா அம்மா பேரவை மூத்த நிர்வாகி கட்டகுட்டி (எ) சேக்உசேன், செய்யது மசூது, தீன்,சித்திக், அப்துல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *