வாழை முட்டுக்கொடுத்தல்..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவிகள்!
தேனி மாவட்டம் சீலையம்பட்டடி பகுதியில், ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் வாழை பயிரிடும் விவசாயி ஈஸ்வரி அவர்களை நேரில் சந்தித்து, வாழை முட்டுக்கொடுதல் பற்றிய செய்முறை விளக்கங்களை வழங்கினர்.மாணவிகள் ரா.தனிஷா, அ.தர்சனா, அ.தர்ஷிணி, மு.சி.தீக்க்ஷனா, அ.கௌசல்யா மற்றும் வி.ஹர்சிதா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
மாணவிகள் கூறியதாவது,வாழை மரங்களுக்கு நடவு செய்த 8-10 மாதங்களுக்குப் பிறகு அதன் தண்டுகள் கனியாகும் போது காற்று மற்றும் கனமழையால் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்க, முட்டுக்கொடுத்தல் (Propping) செய்ய வேண்டும். இதன் மூலம் செடியின் நிலைத்தன்மை அதிகரித்து, மரங்கள் விழாமல் பாதுகாக்கப்படுவதுடன், மகசூலும் அதிகரிக்கும் என அவர்கள் கூறினர்.