பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 38, 40 ஆகிய வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் அகஸ்தினா கோகிலவாணிஅவரது மண்டலத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்ட அரிசியை சோதனை செய்து பார்த்தனர். அவை அனைத்தும் செரிவூட்டப்பட்ட அரிசி என தெரியவந்தது.  இந்த அரிசியால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என தெரிய வந்தது. இதன் மூலம் அந்த பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
0Shares

Leave a Reply