தட்டாம்பாளையம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்

Loading

பண்ருட்டி, நவ.23-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆத்மா குழு தலைவரும் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டார். இதில் அறுபடை மருத்துவக் கல்லூரி மருத்துவ குழு, ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்.நந்தினி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ஷாஜகான், சத்தியநாராயணன், முருகன், சுகாதார ஆய்வாளர்கள், சம்பத், செந்தில்குமார், வட்டார சுகாதார செவிலியர்கள்,
பஞ்சாயத்து தலைவர் சுதா மற்றும் அண்ணாகிராமம் திமுக ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
0Shares

Leave a Reply