பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களின் சொத்துக்களை அபகரித்தால் குண்டர் தடுப்பு சட்டம் பாய வேண்டும்
புதுச்சேரியில் பூர்விகமாகக் கொண்ட மக்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்று பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து அந்த பணத்தில் புதுச்சேரியில் வீடு மற்றும் நிலம் வாங்கி வைத்துள்ளார்கள். இந்த சொத்துக்கள் அனைத்தும் அவர்களது வருகைக்கும் புதுச்சேரியில் ஓய்வு எடுப்பதற்கும் தங்களுடைய பிள்ளைகள் மகள்கள் வந்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்கின்றனர் அவர்கள் அங்கு வருட கணக்கில் தங்கி வேலை பார்ப்பதனால் புதுச்சேரிக்கு அடிக்கடி வருவது தடைபடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களது சொத்துக்களை அபகரித்துக் கொள்கிறார்கள். என்று முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்தி சேகர் முதலமைச்சர் ரங்கசாமி அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.