போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வார்டு49 சோலையப்பன் தெருவில் ஆலமர விழுது சாலையின் நடுவே  தொங்கியபடி இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பள்ளி குழந்தைகள்,வாகன ஓட்டிகள் அதிகம் கடந்து செல்லும் பாதையில் மரத்தின் விழுது அதிக அளவில் சாலை நடுவே தொங்கியபடி இருப்பதால் தண்ணீர் லாரிகள்,கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது மரத்தின் விழுது உராய்வினால் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அச்சபடுகின்றன.இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே சென்னை மாநகராட்சி மற்றும் பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் கவனத்தில்கொண்டு மரத்தின் விழுதுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
0Shares

Leave a Reply