பிலிப்பைன்ஸ்: விபத்தில் சிக்கிய ராணவ விமானம்;15க்கும் மேற்பட்டோர் பலி, 40 பேர் படுகாயங்களுடன் மீட்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப் படையைச் சேர்ந்த C – 130 என்னும் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று அந்நாட்டு நேரப்படி காலை 11:30 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்டுப்பணி தொடர்ந்து வருகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள ஜோலோ துறைமுகத்தில் விபத்தானது நிகழ்ந்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மின்டானோ (Mintano) தீவிலுள்ள ககயான் டீ ஓரோ (Cagayan de Oro) என்ற இடத்திலிருந்து சமீபத்தில் ராணுவ பயிற்சியை மேற்கொண்ட 92 ராணுவ வீரர்களுடன் சுலுவில் (Sulu) அமைந்துள்ள ராணுவத் தளத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த வழியில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ்: விபத்தில் சிக்கிய ராணவ விமானம்;15க்கும் மேற்பட்டோர் பலி, 40 பேர் படுகாயங்களுடன் மீட்பு
“பயணத்தின் நடுவில் அமைந்திருக்கும் ஜோலோ துறைமுகத்தில் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயன்றபோது விமானம் ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்றுள்ளது. அப்போது விமானம் கட்டுபாட்டை மீறி சென்றதால் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதில் பயணம் செய்த 92பேரில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நீடித்து வருவதால் விபத்தில் சிக்கியுள்ள மேலும் சிலரை பத்திரமாக மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்”, என்று விமானப்படைத் தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா (Cirilito Sobejana) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்தது குறித்த காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதேபோல், விமானங்கள் தாக்கப்பட்டதற்கான தடயங்களோ, அறிகுறிகளோ ஏதுவுமில்லை. இருப்பினும், மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் கூடிய விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ்: விபத்தில் சிக்கிய ராணவ விமானம்;15க்கும் மேற்பட்டோர் பலி, 40 பேர் படுகாயங்களுடன் மீட்பு
தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிகளில் தீவிரவாதப் போக்கு அதிகரித்து வருவதால், அதற்கான பாதுகாப்பு நடைமுறைக்காக அப்பகுதியில் ராணுவத் தளங்களை பலப்படுத்தி வருகிறது பிலிப்பைன்ஸ் ராணுவம். அதன் ஒருபகுதியாகவே விமானத்தில் பயணம் செய்த வீரர்கள் சமீபத்தில் பயிற்சியளிக்கப்பட்டு சுலுவிலுள்ள ராணுவத் தளத்திற்கு புறப்பட்ட நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.