முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு தினம்..திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவச்சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவச்சிலைக்கு
மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி அவர்கள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.