முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சப்தகிரி வைகுண்டமணி தலைமையில் தேசிய கொடி ஏந்தி பேரணி!
குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சப்தகிரி வைகுண்டமணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட ஓபிசி அணி செயலாளரும்,குளச்சல் தொகுதி தேர்தல் பார்வையாளருமான ராமச்சந்திரன்,ஆகியோர் தலைமையில் பாஜகவினர் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், நம் நாட்டின் வெற்றியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் சென்றனர்,
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை வரவேற்கும் விதமாகவும், அதன் வெற்றியை கொண்டாடும் பொருட்டும் பயங்கரவாதிகள் மீது துணிந்து நடவடிக்கை எடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும், நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், நம் நாட்டின் வெற்றியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் சென்றனர்,அதேபோல தமிழகம் ,புதுச்சேரி மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் சென்றனர்,
அதன் ஒருபகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே சாமிவிளையில் குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சப்தகிரி வைகுண்டமணி மற்றும்பாரதிய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட ஓபிசி அணி செயலாளரும்,குளச்சல் தொகுதி தேர்தல் பார்வையாளருமான ராமச்சந்திரன்,ஆகியோர் தலைமையில் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தவும், நம் நாட்டின் வெற்றியை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக தேசியக்கொடி ஏந்திய ஊர்வலம் சென்றனர்,இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் கவுன்சிலர் சிவந்தி கனி, கொடுப்பைகுழி பாஜக கிளை தலைவர் சசிகுமார், ஓ பி சி அணி குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, கண்ணன், கலைச்செல்வன், மத்தியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.