தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கரில் கொய்யாக்கன்று பயிர்.. மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு!
தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேமங்கலம் ஊராட்சியில், தோட்டக்கலைத் துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.அன்பழகன் உட்பட பலர் உள்ளனர்.