பிகினி அவதாரத்தால் ரசிகர்களை மயக்கிய துஷாரா விஜயன்

Loading

பிகினி அவதாரத்தால் ரசிகர்களை மயக்கிய துஷாரா விஜயன்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
பின்னர் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். அடுத்ததாக ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வரும் துஷாரா விஜயன் தற்போது தனுஷ் இயக்கும் 50-வது படத்தையும் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் துஷாரா விஜயன், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை துஷாரா தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *