ஶ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயா நாட்டிய பள்ளி

Loading

 ஶ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயா நாட்டிய பள்ளி

 

சென்னை பாடி திருவல்லீஸ்வரா் திருக்கோயிலில் ஶ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயா நாட்டிய பள்ளி சார்பாக 351 மாணவிகளை கொண்டு திருப்புகழ் கருத்தாக்கத்தை பரத நாட்டிய அசைவு மூலம் வெளிபடுத்தி புனித சாதனை நிகழ்வை படைத்தனர்இதில் 351மாணவிகள் ஒரே மேடையில் தொடர்ந்து 10 நிமிடம் திருப்புகழ் கருத்தாக்கத்தை பரத நாட்டிய அசைவு மூலம் வெளிபடுத்தியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

இந்நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராக சிவா முத்துராமலிங்கம்,குமார்,விஜயலட்சுமி,சிவா செந்தில் சிந்தநம்பி நாகநிதி,ஆலய குருக்கள் மற்றும் சங்கீதா சிவகுமார்,சிவகுமார் ஆகியோர் மாணவிகளை பாராட்டி கேடயங்கள்,சான்றிதழ்கள் வழங்கினர்.இதில் பல்வேறு பரத நாட்டிய பள்ளி குருமார்க்கள்,மாணவிகள்,பெற்றோர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply