பாலக்கோட்டில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

Loading

பாலக்கோட்டில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தின் நகர கழக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர கழக செயலாளர் ஞானம் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்க்கு மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், தொழிற் பேரவை மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் DK.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது.
தென்பென்னை ஆற்றின் உபரி நீரை மாவட்டத்திப் உள்ள அனைத்து ஏரிகளுக்கு நிரப்பினால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் செழிப்படையும்,
திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது,
சிப்காட் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அமமுக தொண்டர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பாக்காமல் கட்சிக்காக உழைத்து வருகின்றனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களை சந்தித்து அமமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மசியுல்லா, அம்மா பேரவை மாவட்ட துனைசெயலாளர் சண்முகம், கிளை செயலாளர் குமார், ரங்கநாதன், உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply