உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழா.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் தேசிய அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி, உள்ளுர் நிலைக்குழுவின் சார்பாக ஏப்ரல்-2ஆம் நாள் நடைபெறும் “உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஹோப் ஆட்டிஸம் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி பள்ளி சார்பாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு ஆட்டிஸம் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, வாழ்த்து தெரிவித்து பேசினார்.
ஆட்டிசம் அல்லது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்பு சமூக திறன்கள், பேச்சு மற்றும் சொற்கள் அல்லாத தொடர்பு ஆகியவற்றுடன் சவால்களால் வகைப்படுத்தப்படும் பரந்த அளவிலான நிலைமைகளைக் குறிக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி 67 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசமாக உள்ளனர். ஆட்டிசம் ஒரு ஸ்பெக்ட்ரம் பாதிப்பு என்பதால், மன இறுக்கம் கொண்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பலம் மற்றும் சவால்கள் உள்ளன. மன இறுக்கம் கொண்டவர்கள் கற்றுக்கொள்வது, சிந்திப்பது மற்றும் சிக்கலைத் தீர்க்கும் வழிகளில் மிகவும் திறமையானவர்கள் முதல் கடுமையான சவாலானவர்கள் வரை இருக்கலாம்.
பொதுவாக 2 அல்லது 3 வயதிற்குள் உள்ளவர்களுக்கு ஆட்டிசத்தின்; அறிகுறிகள் தோன்றும். “ஆட்டிசத்திற்கு” சிகிச்சை இல்லை, ஆனால் மன இறுக்கம் கொண்டவர்கள் முழுமையான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ உதவும் சிகிச்சைகள் உள்ளன. ஆரம்பகால நோயறிதல் மற்றும் தலையீட்டின் மூலம், மன இறுக்கம் கொண்ட பலர் தொடர்பு கொள்ளவும், சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவும் மற்றும் அவர்களின் முழு திறனை அடையவும் கற்றுக்கொள்ள முடியும்.
ஏ.எஸ்.டி க்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் ஆனது அவர்களின் தனிப்பட்ட திறமைகளான இசை பயிற்சி, பாடுதல் மற்றும் அறிவு சார்ந்த திறன்கள், ஓவியம், தடகளம் போன்றவற்றை வழக்கமான தொழில்சார் பயிற்சி, பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி நடத்தை மாற்றம், விளையாட்டு பயிற்சி, அறிவாற்றல் பயிற்சி, கல்வி உளவியல் பயிற்சி மற்றும் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வெளி வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.முன்னதாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழாவில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து ஆட்டிசம் குழந்தைகளின் இசை நிகழ்ச்சியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆட்டிசம் குழந்தைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, ஹோப் பொது நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வே.நாகராணி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, மாணவ மாணவியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.