கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் வரதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். அரசு கேபிள் ஆப்பரேட்டரான இவரது மனைவி கீர்த்தனா வீட்டில் துணி துவைத்து விட்டு துணியை காய வைப்பதற்காக மாடிக்கு சென்று கொடியில் போட்ட போது கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையறிந்த மகள் உடனடியாக தந்தை நாகராஜுக்கு தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்த போது மூ ச்சு பேச்சு இல்லாமல் இருப்பதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 108 ஆம்புலன்ஸ்-ல் வந்தவர்கள் பெண்ணை சோதனை செய்து பார்த்த போது இளம் பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.