கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

Loading

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது -கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்,. அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆந்திரபிதேசம் மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம், நரசிபட்டணம் வட்டம், கப்பாடா கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு @பெட்ல அப்பல நாயுடு(48) த/பெ பெட்ல சன்யாசி என்கின்ற பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி செல்லும் போது உளுந்துர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கையும் களவுமாக உளுந்துர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், அப்போது அவரிடமிருந்து சுமார் 26 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இவர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி *மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப* அவர்கள் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தனர் குற்றவாளி பெட்ல அப்பல நாயுடு என்பவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *