சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சியையோட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள சித்தி வினாயகர் ஆலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சியையோட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவதை ஒட்டி யாக பூஜைகள் செய்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் நல்லெண்ணெயில் கருப்பு துணையினால் ஆன எள் மூட்டை கட்டி விளக்கேற்றி வழிபட்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.