ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கோவிந்தபாளையம் இருந்து சித்தேரி வரை சாலை அகலப்படுத்தும் வேலை பணியின் போது ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது
இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக சாலையை ஆய்வு நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்ததாரரை மீது காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர் .
இந்தக் கூட்டத்தில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு அவர்கள் தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைவாசல் ஒன்றிய அவை தலைவர் ஆனந்த மோகன் ,தலைவாசல்ஒன்றிய பொருளாளர் ரவி, தலைவாசல் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் வரவேற்றனர்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ ஆர் இளங்கோவன் அவர்கள் தலைமையில்
ஆத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் ஆத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து ஆத்தூர் நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .