கான்கிரீட் கலவையை சாலையில் கொட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் :- Dr S விஜயதரணி MLA விளவங்கோடு ஊராட்சியில் மடிச்சல் – வட்டவிளை சாலையை ரூபாய் 4 .00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு காங்கிரீட் சாலையாக மாற்றம் செய்யும் விதமாக கான்கிரீட் கலவையை சாலையில் கொட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர் தலைமை தாங்கினார். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும் மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவருமாகிய ரவிசங்கர் முன்னிலை வகித்தார் . இந்நிகழ்ச்சியில் விளவங்கோடு ஊராட்சி உறுப்பினர்கள் எட்வின் , விஜயகுமாரி ,சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மனித உரிமை காங்கிரஸ் தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெகன் ராஜன். மந்திரம் , வினு மற்றும் மகளிர் காங்கிரஸ் சார்பில் ராஜகுமாரி , ராஜம் ,வசந்தகுமாரி ஜெயா , மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜோதிஷ்குமார் , பாகோடு பஞ்சாயத்து காங்கிரஸ் நிர்வாகி பிரேம்குமார் விஜயதரணி எம்எல்ஏ உதவியாளர்கள் ராஜகோபால் மற்றும் வழக்கறிஞர் சிவப்பிரசாத் உட்பட ஏராளமான வட்டவிளை மற்றும் மடிச்சல் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் . விளவங்கோடு ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 30 .00 லட்சம் மதிப்பீட்டில் விஜயதரணி எம்எல்ஏ சட்டமன்ற மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாக விஜயதரணி எம்எல்ஏ கூறினார் ….