பங்குனி 2ஆம் நாள் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் பங்குனி உற்சவ பெருவிழாவை முன்னிட்டு பங்குனி 2ஆம் நாள் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.வண்ணயம்பதி வடசென்னை விஸ்வ பிராம்மணர்கள் தெய்வதிரு பிரம்ம ஶ்ரீ பி.சம்பத் ஆச்சாரி,பிரம்ம ஶ்ரீ பி.எஸ் தியாகராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் திருத்தேர் உற்சவ திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றதுஶ்ரீ பக்தவத்சல பெருமாள் திருத்தேர் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்தனைகள், அர்சனைகள் செய்து தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஶ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழாவில் தக்கார் சத்தியநாராயணன்,செயல் அலுவலர் நித்தியானந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.