ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

Loading

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்ட அரங்கில் மன்ற கூட்டம் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக் குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன் வரவேற்று பேசினார்.இந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை உதவியாளர் வடிவேல் வாசிக்க அனைத்து சாதாரண தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், அனுராதா, சுகுமார் ஆகியோர் பதவி ஏற்று 4 ஆண்டு காலம் முடிவடைந்தும் எந்தவித பணிகளும் சரியான முறையில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. மேலும்  வீடுகள் கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ் முறையாக ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதற்கு ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன் பதில் அளித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *