ரூ 19.46 கோடி மதிப்பீட்டில் பொன்னை அணைக்கட்டினை புனரமைக்கும் பணி
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மேல்பாடி கிராமத்தில் ரூ 19.46 கோடி மதிப்பீட்டில் பொன்னை அணைக்கட்டினை புனரமைக்கும் பணி மற்றும் ஆற்றின் குறுக்கே ரூபாய் 12.94 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி , வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்யானந்தம், பொன்னை ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், மேல் பாலாறு வடி நில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.