உரம் இடுதல் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம் இலத்தூரில்தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண்வளஅட்டை விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது .விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு சாகுபடி செய்யும் முன்னரே வயல்வெளியில் மண் மாதிரி எடுத்து பரிந்துரைப்படி உரம் இடுதல் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வருகை தந்த விவசாயிகளை செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரவேற்றார்.ஒன்றியகுழு உறுப்பினர் வள்ளியம்மாள் முன்னிலை வைத்தார் நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு முகுந்தா தேவி தலைமையேற்றார். ஓய்வு பெற்ற வேளாண்மைதுறை அலுவலர் ராஜேந்திர கணேசன் ஆத்மா திட்டத்தின் தென்காசி வட்டார மேலாளர் சங்கரநாராயணன் செங்கோட்டை வட்டார மேலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் பயிற்சி நடத்தினர். வேளாண்மை உதவி இயக்குனர் முகுந்தா தேவி தனது தலைமை உரையில் மண் ஆய்வு செய்வதன் அவசியம் பற்றி விளக்கி கூறினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் மண் ஆய்வு எவ்வாறு எடுப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மண்வளம் பேணுதல் பற்றிய தொழில்நுட்பஉரையினை வல்லுநர்கள் ஆற்றினர் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள்குமார், அன்புராஜ், கருப்பசாமி ,மூக்கன் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.