தேவதைகள் திருக்கோவில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

Loading

தென் மாவட்டங்களில் குல தெய்வங்கள் வழிபாடு தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.தென்காசி மாவட்டம் நெடுவயல் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கிலிபூதத்தார்,  ஸ்ரீசங்கிலிமாடன் மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோவில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மூலவர் சங்கிலிபூதத்தார், ஸ்ரீ சங்கிலிமாடன், சங்கிலிமாடத்தி, சிவனணைந்த பெருமாள்,  பார்வதி, புணமாலை சூடும் பெருமாள், மொட்டையன்சுவாமி, ஸ்ரீமாசானமுத்து, வனத்தரசிஅம்மன், பேச்சியம்மன், கள்ளவுண்டான், கருப்பசாமி, பாலாண்டியம்மன், தளவாய்மாடன், தளவாய்மாடத்தி, பட்டவராயன், காவல்காரன்சாமிகள் சப்பாணிமாடசாமி போன்ற பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் உள்ளன. நெடுவயல், இடைகால்,  காசிதர்மம் வன்னிய குல ஷத்ரிய சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோவிலின் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. காலை வருஷாபிஷேக யாக வேள்வி நடைபெற்று சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் பரிவார தெய்வங்களுக்கு ஆராதனைகளும் நடைபெற்றது. இக்கோவிலை குல தெய்வமாகக் கொண்டவர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *