காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில்  (28.02.2023)  வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ச்சி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களது ஆறு மாத கால காவல் நிலைய நடைமுறை  பயிற்சியினை  (28-02-2023) அன்று நிறைவு செய்தனர். பயிற்சி காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பயிற்சி நிறைவு பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் பயிற்சிகளை நிறைவு செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை பணியில் நேர்மையுடனும் பொறுப்புடனும் தனது பணியினை திறம்பட செய்ய வேண்டும்  என்றும், தங்களுடைய பணியின் போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும், எந்த ஒரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், பாரபட்சமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு  உணர்வுடன் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்..

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *