வீடுகளில் தோட்டம் அமைக்கவும் இல்லத் தரசிகளுக்கு நேரடி பயிற்சி அளித்தனர்
வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை விவசாயம் வீடுகளில் தோட்டம் அமைக்கவும் இல்லத் தரசிகளுக்கு நேரடி பயிற்சி அளித்தனர் சிதம்பரம், பிப். 19 – கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு வேளாண்மை மாணவர்கள்( B-8) திருமுட்டம் வட்டம், வட்டத்தூர் ஊராட்சியில் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாடி தோட்ட பயிரான அவரையில் உண்டாகும் பூச்சி மேலாண்மை பற்றிய இல்லத்தரசி கேள்விக்கு அவரைக் கொடிக்கு எளிய மற்றும் இயற்கை வழி பூச்சி விரட்டியான இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் செய்முறை விளக்கம் செய்து காட்டினார். மேலும் இலைப்பேன், தட்டப்பூச்சி மற்றும் அசுவினி போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன்களுக்கு உகந்தது என்றும்,பயிர்களுக்கு வகைகளுக்கு உகந்தது, இந்த கரைசல் எந்த விதமான தயக்கமும் இன்றி பயன்படுத்தவும், வீடுகளில் தோட்டம் அமைக்கவும் இல்லத்தரசிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.