பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது:
வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி ஃபார் சிவில் சர்வீஸ் ஆஸ்பிரண்ட்ஸ் (ஏசிஎஸ்ஏ – ACSA) என்ற முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை (residential programme) சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், வெராண்டா ஐஏஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பரத் சீமான், “அறிவொளிச் சுடர்” (Torch of Enlightenment) என்ற பெயரிலான ஜோதியை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு.சகாயத்திடம் ஒப்படைத்தார்.ஒரு ஆண்டு காலத்திற்கான இந்தப் பயிற்சித் இந்த திட்டத்தில், வெராண்டா உதவித்தொகை தேர்வில் (வெஸ்ட் – VEST) தேர்ச்சி பெறுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அகாடமி மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் ஆதரவை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழங்குவார். இந்தியா முழுவதிலும் உயர்மட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்புப் பயிற்சியை எளிதாக்குவார்கள்.விழாவில் பரத் சீமான் பேசுகையில், “இந்த திட்டல் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் திறமையும் அந்தஸ்தும் எங்களுடன் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்களது அடையாளத்தின் மதிப்புகளுடன் இணைந்த ஒரு முன்மாதிரி நபராகத் திகழ்கிறார். அவர் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் பயிற்சிப் பயணத்தின் போது அவர்களுக்குத் தேவையான தெளிவை அளித்து, வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்துவார்.” என்றார்.