ராணுவ வீரர் படுகொலையை கண்டித்து பாஜக சார்பில் மனு
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவரை படு கொலை செய்த தி மு க கவுன்சிலர் சின்னசாமி மற்றும் தி மு க வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பா ஜ க முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக மாநில துணை தலைவர் மாணிக்கம் நடராஜன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகரிடம் மனு அளிக்கபட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மதிச்சியம் மண்டல் தலைவர் முரளி, இளைஞரணி மாவட்ட தலைவர் பாரிராஜா, மாநில ஐ டி விங்க் செயலாளர் விஸ்வநாத், மாநில செயலாளர் அனந்த ஜெயம் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆண்டி, ராஜபாண்டி, தியாகராஜன் உட்பட பலர் சென்றிருந்தனர்.