கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி ப்ரொமோட்டர்அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.புதிய பணியிடங்களை உருவாக்கியும்.காலி பணியிடங்களை நிரப்பியும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்.தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிரான மூன்றாவது மொழி தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.சார் பதிவுத் துறைகளில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்து அரசு நிறுவனங்களான NIC.E LOT.ஆகியவற்றின் மூலம் கணினி மயமாக்க வேண்டும்.அரசாணை 81 படிபணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திடவும்.பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாற்றங்களை நிரப்பிட வேண்டும்.உரிய காலத்தில் முறையாக பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்.பதிவுச் சட்டம் பிரிவு 88 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பனி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய ஒப்படைப்பு.அகவிலைப்படி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்கிட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து. ஆ.சதீஷ் மண்டல தலைவர் கடலூர் மண்டலம் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வரவேற்புரையினை கு.ஆசைத்தம்பி மாவட்ட அமைப்பாளரரும். சி.செல்வ ராமச்சந்திரன் மாநில பிரச்சார செயலாளர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் செயலாளர் TNRDOA.K.மகாலிங்கம் மாவட்ட செயலாளர் TNGEA.T.கொளஞ்சி மாவட்ட தலைவர் TNRDOA.P.ரவிமாவட்ட செயலாளர் DHDOA.K. ரியல் எஸ்டேட் அதிபர் மருது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.