கல்வராயன்மலை பகுதியில் 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை*

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *.மோகன்ராஜ். உத்தரவு பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்  கரியாலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (தனிப்பிரிவு) ராமலிங்கம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குரும்பலூர் ஆற்றில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர்  பிடிக்கக்கூடிய 03 பிளாஸ்டிக் பேரல்களில் 1,200 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் வெல்லம் 300 கிலோ கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை உதவியோடு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள் அது உண்மை என்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படும் என தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *