அறிவியல் ஒளி திறனறித் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு..

Loading

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப் பட்டியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேலாண்மை குழு தலைவி இலக்கியா தலைமையில் நடைபெற்றது. துணைத்  தலைவி          வேத நாயகி முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிமேலாண்மை குழு கூட்டத்தில்  மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பில் அரசு வழங்க கூடிய சலுகைகள், இரண்டாம் பருவ தேர்ச்சி அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியம் நல வாழ்வு குறித்தும், நம்ம ஊரு பள்ளி திட்டம்,இடைநிற்றல் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைந்த கல்வி குறித்தும், அறிவியல் ஒளி தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு,      தேசிய திறனாய்வு தேர்வு  குறித்தும், போக்குவரத்து உயர்கல்வி குறித்தும், சமையலறை, புதிய கட்டிடங்கள்,வகுப்பபறை பழுதுபார்த்தல் குறித்தும், விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமதுல்லா, ஆனந்தராஜ், நிவின்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply