கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் முகாம் :
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கி பேசினார்.திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெறுவதிலும், இதர தேவைக்காகவும் கடன் பெறுவதில் சிரமங்கள் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அந்த கஷ்டத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து அனைத்து கல்லூரிகளிலும் கல்வி கடன் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நல்வாய்ப்;பினை ஏற்படுத்தும் விதமாக, தற்பொழுது நம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி என்ற இந்த பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை மாணவர்கள் அனைவரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி நம் மாவட்டத்தில் நடைபெறுவது என்பது ஒரு சிறப்பான முயற்சி ஆகும். இந்த தருணத்தில் இம்முகாம் நடைபெற பெரும் முயற்சி எடுத்து செயல்படும் முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டுகிறேன்.இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இக்கல்வி கடன் முகாம் மூலமாக அனைத்து மாணவர்களும் பயன்பெற இயலாது.ஆகவே, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், வட்டாரங்களில் உள்ள கல்லூரிகளில் இதேபோன்ற முகாம்கள் நடத்துவதன் மூலம் தான் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். இரண்டாவதாக இதுபோன்ற முகாம்கள் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அந்த கல்லூரிக்கு சென்று யாருக்கு கல்வி கடன் தேவைப்படுகிறது என்ற விவரங்கள் அறிந்துகொண்டு, முகாம்கள் நடத்துவதால் தான் பயனுள்ளதாக அமையும்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்கு ஊன்றுகோலாக அமையும் இக்கல்விக்கடன்களை பெற்று தங்களுக்கான கல்வியறிவை வளர்த்துக்கொண்டு நாளைய சமுதாயம் ஓர் கல்விக்கான சமுதாயமாய் அமைய வழிவகுத்து மாணவர்களாகிய நீங்கள் முன்னேறுவதோடு, இந்நாட்டையும் முன்னேற்ற கல்வி ஓர் பெரும் அடித்தளமாய் அமையும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வியானது உங்களின் பொருளாதாரத்தினால் தடைபட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் இக்கல்விக்கடன்கள் முகாம்கள் நடத்தப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கல்வியில் முழு ஈடுபாடு காட்டி வாழ்வில் வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதற்காக ஒரு மாணவருக்கு இந்தியன் வங்கி மூலம் ரூ.30 இலட்சம் கல்விக்கடன் வழங்கப்படுவதற்கான கல்விக்கடன் ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி நிறுவனர் எஸ்.கே.புருஷோத்தமன், மேலாண்மை நிர்வாகி முனைவர்.ஏ.ஆர்..பிரபாகரன், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதற்காக ஒரு மாணவருக்கு இந்தியன் வங்கி மூலம் ரூ.30 இலட்சம் கல்விக்கடன் வழங்கப்படுவதற்கான கல்விக்கடன் ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி நிறுவனர் எஸ்.கே.புருஷோத்தமன், மேலாண்மை நிர்வாகி முனைவர்.ஏ.ஆர்..பிரபாகரன், பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.