உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

Loading

தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். மஹாலில் நடைபெற்ற, HCL SAMUDAY – உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்று, நிகழ்வினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்
விழாவில் அவர் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்குப் பங்காற்றிடும் வகையில் சமூகப் பொறுப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வரும் HCL நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், HCL SAMUDAY திட்ட இயக்குநர் ஆலோக் வர்மா உட்படப் பலர் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *