கோவில்பட்டியில்  உலக திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் சிந்தனைக் கூட்டம்

Loading

குடும்ப நிகழ்வுகளை தமிழ்மரபுபடி குறள் நெறிப்படி நடத்த முடிவு
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான சிந்தனை கூட்டம் கோவில்பட்டி பைரவா மஹாலில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப நிகழ்வுகளை தமிழ் மரபுபடி குறள்நெறிப்படிநடத்திடவும்,ஒவ்வொரு திருக்குறள் மன்றங்களிலும் திருக்குறள் ஆசானை உருவாக்கிடவும்,திருக்குறளின் புகழை கிராமங்கள் தோறும் பரப்பிடவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் திரைப்பட இயக்குனர் சேகர் காணொளி மூலம் தலைமை உரையாற்றினார்.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார், உலக திருக்குறள்  கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர்
க. கருத்தபாண்டி தொடக்க உரையாற்றினார்,
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தங்க.ஆதிலிங்கம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் பொருளாளர் இராம.சந்திர சேகரன், கன்னியாகுமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமார்,கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம். சீனிவாசன்,துணைத் தலைவர் திருமலை முத்துசாமி,உரத்த சிந்தனை வாசர் வட்ட தலைவர் சிவானந்தம்,பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,தூத்துக்குடி மாவட்ட திருக்குறள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முத்துச்செல்வன்,அமல புஷ்பம்,கழுகுமலை திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் முருகன்,பொன்ராஜ் பாண்டியன், நெல்லை திருவள்ளுவர் மன்ற தலைவர் ராமசாமி,உள்பட நெல்லை,கன்னியாகுமரி,விருதுநகர்,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள திருக்குறள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் தூத்துக்குடி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஜெயஸ்ரீகிறிஸ்டோபர் நன்றி கூறினார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *