ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 24ம் மாத அமாவாசை அன்னதான விழா
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 24ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிறுவனர் ரவிச்சந்திரன், அன்னை தெரேசா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் விஸ்வநாதன், கருணை கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் ஜெயகுமார், சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணைச் செயலாளர் சண்முகம், ஜெய்மாருதி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆற்காடு நகர மன்ற உறுப்பினர் கண்மணி, சாணக்கியனின் வெற்றி முரசு பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியர் ஐசக், பைனான்சியர் தனஞ்ஜெயராஜ், ரஜினி, புவனா ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர். இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் டிரஸ்ட் நிர்வாகிகள் பூக்கடை வெங்கடேசன், நடராஜன், பிரபாகரன், தமிழ், முருகன், சக்திவேல், வரலட்சுமி மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகி மதன்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.