கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

Loading

கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நேசம் கல்வி மற்றும் சமூக நலன் அறக்கட்டளையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர்  செய்தியாளர்களை
சந்தித்த அமைச்சர் சக்கரபாணி :-
கோடை காலம் துவங்கி இருக்கின்ற நிலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு தடையின்றி வழங்கிட அரசி பருப்பு உட்பட அனைத்து பொருட்களும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என்றும்
தமிழ்நாடு முழுவதும் 19 ஆயிரத்து 500 தனி நபர் குடும்ப அட்டை பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தனிநபர் குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படும் என்றார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *