குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை
பாலக்கோடு, மார்ச்.24-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள மந்திரி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் முரளி இவர் கொலசனஅள்ளி தனியார் பால் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் காவேரிப்பட்டனம் அருகே ஆத்துவாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி (வயது. 25) என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை,
தேன்மொழி பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
கனவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட தேன்மொழி நேற்று முன்தினம் இரவு அளவுக்கதிமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொன்டார்.
மனைவி தூங்குவதாக நினைத்துக் கொண்டு வழக்கம் போல் கனவன் வேலைக்கு சென்று விட்டார்,
நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து பார்த்தபோது தேன்மொழி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தர்மபுரி ஆர்.டி. ஓ சித்ராவிஜயன்
வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்.