சென்னையில் கால்களை துண்டாக்கி வாலிபர் கொடூர கொலை!

Loading

சென்னையில் கால்களை துண்டாக்கி வாலிபர் கொடூர கொலை! ‘திருந்தி வாழ்ந்த’ 4 மாதத்தில் தீர்த்துகட்டினர்

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் சீனு என்பவர் வசித்து வந்தார். இவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் திருந்தி வாழ அவர் முடிவு செய்தார்.

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் வசித்தவர் சீனு. இவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திருந்தி வாழ அவர் முடிவு செய்தார்.

‘யாருக்கெல்லாம் துப்பாக்கி வேணுமோ வந்து வாங்கிக்கோங்க..’ – மக்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் அரசு
இதுதொடர்பாக அவர் போலீசில் பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். கடந்த 4 மாதங்களாக எந்த பிரச்சனைகளிலும் அவர் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சீனு தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது நண்பர் லோகேஷ் மற்றும் கார்த்தி வந்தனர். வேறு சில நண்பர்களுடன் பேச வேண்டி உள்ளது எனக்கூறி அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் சீனு வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சீனு ஆறு பேருடன் சென்றதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சென்ற திசையில் குடும்பத்தினர் தொடர்ந்து தேடினர். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே தடம் அருகே சீனு பிணமாக கிடந்தார். அவரை கொடூரமான முறையில் யாரோ கொலை செய்திருந்தனர். அவரது இரண்டு கால்களும் வெட்டப்பட்டு தனித்தனியே வீசப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சென்னை கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவரை கொலை செய்தவர்கள், கொலையை மறைக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசாரை நம்ப வைக்கும் நோக்கத்தில் கால்களை தனியே வெட்டி வீசியதும் தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இருப்பினும் அவரை யார் கொலை செய்தனர், எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.நான்கு மாத காலமாக திருந்தி வாழ்ந்து வந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *