குடியாத்தம் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பரிமுதல்
வேலூர் ஜூலை 12
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தில் ஆந்திர பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அவருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட வழங்கல் அதிகாரி காமராஜ் மற்றும் குடியாத்தம் வட்ட வழங்கல் அதிகாரி தேவி தலைமையில் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில் அங்கு தனியாக நின்றிருந்த லாரியில் சுமார் 8.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
லாரி மற்றும் அரிசி பறிமுதல் செய்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி காமராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை குடியாத்தம் பாக்கம் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வாகன எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.